டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆக்சனுக்கு பேர்போன அர்ஜூனுக்கு சமீபகாலமாக ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காததால் தனது ரூட்டை மாற்றுகிறார். வசந்த் இயக்கி வரும் 3 பேர் 3 காதல் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பவர், தற்போது வெளியாகியுள்ள மணிரத்னத்தின் கடல் படத்தில் அதிரடி வில்லனாக உருவெடுத்திருக்கிறார். அப்படம் திரைக்கு வரும் வரை அர்ஜூன் அந்த மாதிரி ஒரு வேடத்தில் நடித்திருப்பார் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் படத்தைப்பார்த்து விட்டு அர்ஜூனா இப்படி அதிரடி வில்லனாக நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மேலும் சில இயக்குனர்களும் அர்ஜூனை தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கினர். ஆனால் அதற்கு மறுத்து விட்டார் அர்ஜூன். மணிரத்னம் எனக்கு மிக பிடித்தமான இயக்குனர். அதனால்தான் அவர் கடல் படத்துக்கு என்னை அழைத்தபோது என்ன கதை, என்ன கேரக்டர் என்றுகூட கேட்காமல் நடித்தேன். அது வில்லன் என்று தெரிந்தபோதுகூட எனக்கு வருத்தமோ, வெறுப்போ கிடையாது. மணிரத்னம் சொன்னால் எந்த மாதிரியான வேடத்திலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணமே என் மனதளவில் இருந்ததால் அந்த கதாபாத்திரத்தை முழுசுமாக உணர்ந்து அனுபவித்தே நடித்தேன் என்கிறார் அர்ஜூன்.