மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஸ்வரூபம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பாக கூறி அதற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு ஒருவழியாக இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அடுத்து ஒரு படம் இதே போன்ற கதையுடன் வருகிறது. அது "கரும்புலி". முதலில் "உயிரெழுத்து" என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் இப்போது கரும்புலி ஆகியிருக்கிறது. முதலின் சென்னை தணிக்கை குழு படத்தை அனுமதிக்க மறுத்தது. மறு தணிக்கையிலும் படத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதன்பிறகு தணிக்கை குழு சொன்ன காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டு அதற்கு பதிலாக வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு அதனை படத்தில் சேர்த்து இப்போது தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவை தீவிரவாதிகள் அழிக்க வருவதாகவும், அதனை ஹீரோ தடுத்து காப்பாற்றுவதாகவும் கதை. மகேஷ் என்பவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். வர்ஷா பாண்டே ஹீரோயின். "ஒரு தீவிரவாதி உண்மையான முஸ்லிம் இல்லை. ஒரு உண்மையான முஸ்லிம் தீவிரவாதியாக இருக்க மாட்டான் என்ற கருத்தைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன். தணிக்கை குழுவின் விதிகளுக்கு உட்பட்டு காட்சிகளை மாற்றி உள்ளோம். வருகிற 15ந்ந தேதி வெளிவருகிறது" என்கிறார் இயக்குனர் பரமேஷ்வர்.