இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பல தடைகளை கடந்து விஸ்வரூபம் படம் இன்று தமிழகம் முழுக்க சுமார் 600 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டமும் அலைமோதுகிறது. கமலின் பிரம்மாண்ட தயாரிப்பில் அவரே இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். அமெரிக்கா-ஆப்கன் பயங்கரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர், இந்தி நடிகர் ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சுமார் ரூ.95 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜன-25ம் தேதி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் பிப்-1ம் தேதி வடமாநிலங்களிலும் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பால் இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. பிறகு கோர்ட்டை நாடிய கமலுக்கு ஒருநபர் நீதிபதி தடையை அகற்றினாலும், தமிழக அரசு மேல்முறையீடு செய்து மீண்டும் கோர்ட்டில் தடை வாங்கியது. படம் ரிலீஸ் ஆகாததால் கமலின் உருக்கமான பேட்டியை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக திரையுலகினரும், அரசியல் கட்சியனரும், ரசிகர்களும் களம் இறங்கினர். இந்தசூழலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை ரிலீஸ் செய்யுமாறு கோரினார். அதன்படி முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இப்படத்துக்கான தடை நீங்கியது. படமும் பிப்-7ம் தேதி தமிழகம் முழுக்க ரிலீஸ் ஆகும் என்று கமல் அறிவித்தார்.
அதன்படி விஸ்வரூபம் படம் இன்று(பிப்-7ம் தேதி) தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பொதுவாக கமல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆனால் இப்படத்திற்கு எழுந்த பிரச்னை, இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் அனைத்து தரப்பினர் இடையேயும் ஆர்வத்தை தூண்டியது. அதனால் படம் ரிலீஸ் ஆவதற்கு இரு தினங்களுக்கு முன்பே ஏராளமானபேர் முன்பதிவு செய்து இருந்தனர். மேலும் டிக்கெட் வாங்க அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தினர். சில நகரங்களில் ரசிகர்களுக்காக நள்ளிரவு சிறப்பு காட்சியும், இன்னும் சில இடங்களில் காலை 6மணிக்கு சிறப்பு காட்சிகளும் காட்டப்பட்டது. தமிழகத்தில் சுமார் 600 தியேட்டர்களில் படம் ரிலீஸாகி உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து தியேட்டர்களிலும் ரசிர்கள் கூட்டம் அலைமோதுகிறது.