ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வன்முறை காட்சிகள், பாலியல் உணர்வை தூண்டும் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளின் அடிப்படையில் படங்களுக்கு ஏ சான்று கொடுத்து வந்த தணிக்கை துறை இனி, ஒரு படத்தில் குத்துப்பாட்டு என்ற பெயரில் கவர்ச்சி பாட்டு இருந்தாலே அந்த படத்துக்கும் ஏ சான்று கொடுக்க முடிவு செய்துள்ளது. இந்திய சினிமாக்களில் அதுவும் கமர்ஷியல் படங்களில் நல்ல கதை இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் ஒரு குத்துப்பாட்டு இருக்க வேண்டும் என்ற சூழல் சினிமா உலகில் காலம் காலமாக இருந்து வருகிறது. சமீபகாலமாக இதுபோன்ற பாட்டுகள் அதிகம் இடம் பெறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் இது போன்ற பாடல்கள் அதிகம் இடம்பெறுகின்றன. இதற்கு என்று கவர்ச்சி நடிகைகள் சிலர் இருந்தாலும், ஒரு பாட்டுக்கு அதிகம் பணம் தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் பணத்தை வாரி கொடுப்பதால் முன்னணி நடிகைகள் பலரே இதுபோன்ற ஆட்டங்களை ஆட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவையே அதிர வைத்த டில்லி மாணவி பலாத்காரம் சம்பவம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ததுடன், சினிமா தணிக்கை துறையையும் சிந்திக்க வைத்துள்ளது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களுக்கு சினிமாவும் ஒரு காரணமாக அமைவதால் தணிக்கை துறையும் சில அதிரடி திட்டங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி இனி படங்களில் குத்தாட்டம் என்ற பெயரில் கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றால் அந்தபடத்திற்கு ஏ சான்று வழங்குவது என்று முடிவு செய்து இருக்கிறது.
தணிக்கை வாரியத்தின் இந்த முடிவால் திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஒரு படத்திற்கு ஏ சான்று வழங்கப்பட்டால் அதனை டி.வி.க்களில் ஒளிப்பரப்புவது உள்ளிட்ட பல நடைமுறை சிக்கல் இருக்கின்றனர். எனவே இதனை தணிக்கை துறை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.