டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொம்மரிலு பாஸ்கர் இயக்கிய "ஓங்கோலு கிட்டா" தெலுங்கு படத்தில் பிரகாஷ் நிர்வாணமாக நடித்துள்ளது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: பொம்மரிலு பாஸ்கர் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். பொம்மரிலு எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. வில்லனா இருந்த என்னை நல்ல அப்பா கேரக்டர் ஆளாக மாற்றியது அந்தப் படம்தான். பாருகு, ஆரஞ்சு படத்திலும் நல்ல அப்பாவாக நடித்தேன். நான்தான் பாஸ்கரிடம் உங்கள் படத்தில் நல்ல அப்பாவாகவே நடிக்கிறேன். அடுத்த படத்தில் வித்தியாசமான கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டேன். அதை ஏற்றுக் கொண்டுதான ஓங்கொலு கிட்டாவில் வித்தியாசமான கேரக்டர் கொடுத்தார். வெளி உலகத்தில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் வக்கிரமான ஆளாக வாழும் கேரக்டர். அந்த கேரக்டருக்கு நிர்வாண காட்சி அவசியம் தேவைப்பட்டது. இதை ஏன் பெரிது படுத்தி நீக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் இதை வியாபார பரபரப்புக்காக செய்யவில்லை. நான் ஒன்றும் கவர்ச்சியான ஆளும் இல்லை என்றார்.