கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பொம்மரிலு பாஸ்கர் இயக்கிய "ஓங்கோலு கிட்டா" தெலுங்கு படத்தில் பிரகாஷ் நிர்வாணமாக நடித்துள்ளது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: பொம்மரிலு பாஸ்கர் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். பொம்மரிலு எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. வில்லனா இருந்த என்னை நல்ல அப்பா கேரக்டர் ஆளாக மாற்றியது அந்தப் படம்தான். பாருகு, ஆரஞ்சு படத்திலும் நல்ல அப்பாவாக நடித்தேன். நான்தான் பாஸ்கரிடம் உங்கள் படத்தில் நல்ல அப்பாவாகவே நடிக்கிறேன். அடுத்த படத்தில் வித்தியாசமான கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டேன். அதை ஏற்றுக் கொண்டுதான ஓங்கொலு கிட்டாவில் வித்தியாசமான கேரக்டர் கொடுத்தார். வெளி உலகத்தில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் வக்கிரமான ஆளாக வாழும் கேரக்டர். அந்த கேரக்டருக்கு நிர்வாண காட்சி அவசியம் தேவைப்பட்டது. இதை ஏன் பெரிது படுத்தி நீக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் இதை வியாபார பரபரப்புக்காக செய்யவில்லை. நான் ஒன்றும் கவர்ச்சியான ஆளும் இல்லை என்றார்.