ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா | விரைவில் மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! |
பொம்மரிலு பாஸ்கர் இயக்கிய "ஓங்கோலு கிட்டா" தெலுங்கு படத்தில் பிரகாஷ் நிர்வாணமாக நடித்துள்ளது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: பொம்மரிலு பாஸ்கர் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். பொம்மரிலு எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. வில்லனா இருந்த என்னை நல்ல அப்பா கேரக்டர் ஆளாக மாற்றியது அந்தப் படம்தான். பாருகு, ஆரஞ்சு படத்திலும் நல்ல அப்பாவாக நடித்தேன். நான்தான் பாஸ்கரிடம் உங்கள் படத்தில் நல்ல அப்பாவாகவே நடிக்கிறேன். அடுத்த படத்தில் வித்தியாசமான கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டேன். அதை ஏற்றுக் கொண்டுதான ஓங்கொலு கிட்டாவில் வித்தியாசமான கேரக்டர் கொடுத்தார். வெளி உலகத்தில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் வக்கிரமான ஆளாக வாழும் கேரக்டர். அந்த கேரக்டருக்கு நிர்வாண காட்சி அவசியம் தேவைப்பட்டது. இதை ஏன் பெரிது படுத்தி நீக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் இதை வியாபார பரபரப்புக்காக செய்யவில்லை. நான் ஒன்றும் கவர்ச்சியான ஆளும் இல்லை என்றார்.