பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாண்டிராஜ் இயக்கி இருக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(06.012.13) நடைபெறுவதாக இருந்த நிலையில் எல்ரெட் குமாரின் பிரச்னையால் ஆடியோ விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பசங்க, மெரினா படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகர்களாக சிவகார்த்திகேயனும், விமலும் நடித்துள்ளனர். நாயகிகளாக பிந்துமாதவியும், ரெகினாவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். காமெடி கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(பிப்.6ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விழாவினை ரத்து செய்துவிட்டனர்.
இதுப்பற்றி விசாரித்ததில், முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை இயக்கிய எல்ரெட் குமார், கடந்த 2008ம் ஆண்டு கவுதம் மேனனிடம் சிம்புவை வைத்து படம் தயாரிக்க ரூ.4.25 கோடி பணம் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி கவுதம் படத்தை இயக்கவில்லை. கவுதம் மேனன் அப்போது போட்டோன் பேக்டரி என்ற பெயரில் படங்களை தயாரித்தார். இதில் பங்குதாரர்களாக கவுதமும், பி.மதன் என்பவரும் இருந்தனர். ஆனால் இப்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து படங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளனர். மதன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பும் கம்பெனியையும், கவுதம், போட்டான் கதாஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார்கள். அதில் மதன் தயாரிக்கும் படம் தான் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இருவரும் தனித்தனியாக படம் தயாரிக்க ஆரம்பித்துள்ளதால் தனக்கு சேர வேண்டிய படம் கிடைக்காது என்று எண்ணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் எல்ரெட் குமார். இதனால் கவுதம் மேனன் அடுத்து சூர்யாவை வைத்து இயக்க இருந்த படத்தை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்.
இந்தசூழலில் எல்ரெட் குமார் மதன் மீது போலீசில் புகார் கொடுத்து அவர் தயாரித்து வரும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தடை செய்யவும், ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்ய கோரியும் புகார் கொடுத்துள்ளார். இருந்தும் ஒரு கடிதம் ஒன்று கொடுத்து ஆடியோ வெளியீட்டு விழா நடத்துங்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆடியோ வெளியீட்டின்போது எல்ரெட் குமார் எதுவும் பிரச்னை செய்வார் என்று எண்ணி கடைசி நேரத்தில் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்துவிட்டனர். இருந்தும் படத்தின் ஆடியோ சி.டி.யை விழா இன்றி சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.