Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பதவி மோகம் தீரவில்லை! கேயார்

06 பிப், 2013 - 10:16 IST
எழுத்தின் அளவு:

எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தரப்பினருக்கு பதவி மோகம் தீரவில்லை என்று அவர்கள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துவிட்டு வந்த கேயார் தெரிவித்தார். சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவாளர்கள் மீது, கேயார், பிரமிடு நடராஜன் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட் தயாரிப்பாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர்கள், கேயார், பிரமிடு நடராஜன், உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த மனு விவரம்:திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், தானு, தேனப்பன் ஆகியோர் முறையாக செயல்படாததால், கடந்த ஆண்டு, அக்டோபர், 28ம் தேதி சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினோம். இவர்கள் மூவருக்கும் எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஓட்டெடுப்பு நடத்தினோம். ஓட்டு எண்ணிக்கையில், சந்திரசேகர் தரப்புக்கு ஆதரவாக, 10 பேரும், எதிராக, 204 பேரும் ஓட்டளித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு பதவி பறிபோனது உறுதியானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிலிம் சேம்பர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்கியபோது, சந்திரசேகர் ஆதரவாளர்கள் பாபு கணேஷ், ஜெமினி ராகவா உளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கோஷம் எழுப்பியபடி, இடையூறு செய்தனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எஸ்.ஏ.,சந்திரசேகர் தரப்பினர், சங்கம் தொடர்பான ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளனர். இதை மீட்டுத்தர வேண்டும். தொடர்ந்து சங்க நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்மனு குறித்து, தயாரிப்பாளர் கேயார் கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, எல்லா நடவடிக்கைகளையும் முறைப்படி செய்து வருகிறோம். நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியுற்ற பின்னரும், சந்திரசேகர் மற்றும் அவரது தரப்புக்கு, இன்னும் பதவி மோகம் தீரவில்லை.அவர்கள் சங்க நடவடிக்கைகளுக்கு என்ன இடையூறு செய்தாலும், சட்டத்துக்கு கட்டுப்பட்டு, நியாயமான முறையில் எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தினேஷ் - tamilnadu ,இந்தியா
06 பிப், 2013 - 13:56 Report Abuse
 தினேஷ் விஜய்க்கு ...................பெரிய பருப்பு நெனப்பு ...............இவன் அப்பனுக்கு ......................சினிம்மாவில் பெரிசா ஆளு ..............கிற நீனைப்பு ...............?முட்டாபயலுக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in