‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தரப்பினருக்கு பதவி மோகம் தீரவில்லை என்று அவர்கள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துவிட்டு வந்த கேயார் தெரிவித்தார். சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவாளர்கள் மீது, கேயார், பிரமிடு நடராஜன் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட் தயாரிப்பாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர்கள், கேயார், பிரமிடு நடராஜன், உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த மனு விவரம்:திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், தானு, தேனப்பன் ஆகியோர் முறையாக செயல்படாததால், கடந்த ஆண்டு, அக்டோபர், 28ம் தேதி சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினோம். இவர்கள் மூவருக்கும் எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஓட்டெடுப்பு நடத்தினோம். ஓட்டு எண்ணிக்கையில், சந்திரசேகர் தரப்புக்கு ஆதரவாக, 10 பேரும், எதிராக, 204 பேரும் ஓட்டளித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு பதவி பறிபோனது உறுதியானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிலிம் சேம்பர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்கியபோது, சந்திரசேகர் ஆதரவாளர்கள் பாபு கணேஷ், ஜெமினி ராகவா உளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கோஷம் எழுப்பியபடி, இடையூறு செய்தனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எஸ்.ஏ.,சந்திரசேகர் தரப்பினர், சங்கம் தொடர்பான ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளனர். இதை மீட்டுத்தர வேண்டும். தொடர்ந்து சங்க நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்மனு குறித்து, தயாரிப்பாளர் கேயார் கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, எல்லா நடவடிக்கைகளையும் முறைப்படி செய்து வருகிறோம். நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியுற்ற பின்னரும், சந்திரசேகர் மற்றும் அவரது தரப்புக்கு, இன்னும் பதவி மோகம் தீரவில்லை.அவர்கள் சங்க நடவடிக்கைகளுக்கு என்ன இடையூறு செய்தாலும், சட்டத்துக்கு கட்டுப்பட்டு, நியாயமான முறையில் எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.