டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன. தீவிரவாதிகளின் தாக்குதல், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. சில தியேட்டர்களை தீவிரவாதிகளிள் தாக்கி அழித்தனர். மீண்டும் அங்கு தியேட்டர் திறக்க நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு லால் சவுக் பகுதியில் ஒரு தியேட்டர் திறக்கபட்டடது அதனை தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கினார். அதனால் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அங்கு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற தியேட்டர் செயின் நிறுவனமான ஐநாக்ஸ் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து 5 திரைகள் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கை அமைத்துள்ளது. இவற்றில் ஒரே நேரதில் 522 பேர் படம் பார்க்கலாம். வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த திரையரங்குகள் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மற்றும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா ஆகிய படங்களை திரையிட உள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 26ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.