ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த பிரியாமணி, இயக்குனர் அமீர் தர இருந்த பட வாயப்பை தவற விட்டுள்ளார். பருத்தி வீரன் படத்திற்கான சம்பளம் தொடர்பாக பிரியாமணிக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், அமீர் இயக்க இருக்கும் கண்ணபிரான் படத்தில் பிரியாமணியை, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க வைக்க போவதாக அமீர் முடிவு செய்து இருந்தார். பிரியாமணியுடனான கோபம் தீர்ந்துவிட்டது, நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம் என்றும் அமீர் தெரிவித்து வந்தார். இதைப் பற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, கண்ணபிரான் பட கதை பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன் என்று கூறிவிட்டார். இதனால், கோபமடைந்த இயக்குனர் அமீர், பிரியாமணி தன் படத்திற்கு வேண்டவே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாராம்.