டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை எல்லாம் முடிந்து வருகிற 7ம் தேதி படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவர் ஒருவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதுகுறித்து சென்னையை சேர்ந்த வக்கீல் ஜெபகுமார் ஜார்ஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, விஸ்வரூபம் படத்தில் கிறிஸ்தவ மதத்தவரை புண்படுத்தும்படியான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே அந்தக்காட்சிகளை நீக்க வேண்டும். அதுவரை இப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவழக்கை நீதிபதிகள் தர்மாராவ் மற்றும் வேணுகோபால் ஆகியோர் விசாரணைக்கு எடுத்து கொண்டனர். அப்போது நீதிபதிகள், இப்போது தான் இப்படம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளன. மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.