Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 சிறுநீரகங்களும் பாதிப்பு : உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி

17 செப், 2022 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Legendary-actress-Jayakumari-is-fighting-for-her-life

நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்ஷாக்காரன், தேடி வந்த லக்ஷ்மி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெய்குமாரி. வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார். அந்தக் காலத்திலேயே நீச்சல் உடையில் நடித்தவர்.
70 வயதை கடந்து விட்ட அவர் தற்போது வேளச்சேரியில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவர் அப்துல்லா இறந்து விட்டார். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஜெய்குமாரி தனது வறுமை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: எனது சொந்த ஊர், பெங்களூர். ஆனால் வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாம் சென்னையில்தான். என் உடன்பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டதால், 6 வயது சிறுமியாக இருந்தபோதே நடிக்க வந்துவிட்டேன். என் முதல் படம், 'மக்கள் ராஜ்யாக்' என்ற கன்னட படம். எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி' தான் என் முதல் தமிழ் படம். அப்போது எனக்கு 14 வயது. அதன்பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும், நடிப்பதை விட, கவர்ச்சி நடனத்துக்கு அதிகமாக சம்பளம் கொடுத்ததால், நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டினேன்.

நான் நடித்து சம்பாதித்து, 2 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். என்னுடைய 25வது வயதில், நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு சாஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தார்கள். என் கணவர் சொந்த படம் எடுக்க ஆரம்பித்தார். 'முன்னொரு காலத்திலே' என்ற படத்தை தயாரித்தோம். படம் முடிவடைந்த நிலையில், என் கணவருக்கும், பைனான்சியருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த கவலையில், என் கணவர் மரணம் அடைந்து விட்டார்.

அதன்பிறகுதான் என் வாழ்க்கையில் சோதனை ஆரம்பம் ஆனது. கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை, கடனுக்காக எடுத்துக் கொண்டார்கள். நான் 3 கார்கள் வைத்திருந்தேன். மூன்று கார்களையும் விற்று விட்டு வாடகை வீட்டில் குடியேறினேன். மூத்த மகளை படிக்க வைத்த அளவுக்கு, இரண்டாவது மகளையும், மகனையும் படிக்க வைக்க முடியவில்லை. என் தங்கைகள் எனக்கு உதவ முன் வரவில்லை. கஷ்டப்பட்டு இரண்டாவது மகள் பானுவுக்கு திருமணம் செய்து வைத்தேன். 2 மகள்களும் என்னை கவனிப்பதில்லை. எந்த உதவியும் செய்வதில்லை. நானும், என் மகனும் வேளச்சேரியில் 750 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

இவ்வாறு அந்த பேட்டியில் ஜெய்குமாரி கூறியிருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க அனைத்து தகுதியும், அழகும் இருந்தும் ஏனோ அவரை கவர்ச்சி வேடங்களில் ஆட விட்டது உண்மையில் பெரிய வருத்தமே. 200 படங்களுக்கு மேல் நடித்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது துரதிர்ஷ்டமே. பல ஆண்டுகளாக ஏழ்மையில் தவித்து வரும் நடிகைக்கு நடிகர் சங்கமோ, திரையுலகமோ யாரும் உதவவில்லை.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
63 ஆண்டுகளாக சினிமா என்னை வாழ வைத்துள்ளது - ‛விக்ரம்' 100 நாள் கொண்டாட்டத்தில் கமல் பேச்சு63 ஆண்டுகளாக சினிமா என்னை வாழ ... கனடா நாட்டு வெப் சீரிசின் ரீமேக்கில் அஞ்சலி கனடா நாட்டு வெப் சீரிசின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Bhaskaran - Chennai,இந்தியா
20 செப், 2022 - 21:35 Report Abuse
Bhaskaran பாவம் விஷால் பணம் கொடுத்து உதவலாம்
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
18 செப், 2022 - 10:01 Report Abuse
VENKATASUBRAMANIAN பாவம். சிலர் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற தெரியாமல் இப்படித்தான் படம் எடுக்கிறேன் என்று இழந்து விடுகிறார்கள். இப்போது உள்ளவர்கள் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் அது ஒன்றே காப்பாற்றும்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18 செப், 2022 - 06:38 Report Abuse
Natarajan Ramanathan சிறிதும் இரக்கம் ஏற்படுத்தாத பதிவு....
Rate this:
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
17 செப், 2022 - 20:18 Report Abuse
Bismi நடிகைகளின் வாழ்க்கை விட்டில் பூச்சி போலத்தான். இதை அறிந்த நடிகைகள் தப்பித்துக் கொள்கின்றனர்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
17 செப், 2022 - 15:43 Report Abuse
RAMAKRISHNAN NATESAN .... அப்போ அந்த காலத்துலயே லவ் சிக்காத் இருந்திருக்கு ....
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in