டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹிந்தியில் சீனிகம், பா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பால்கி. தற்போது துல்கர் சல்மானை வைத்து ஹிந்தியில் 'சுப்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரிவெஞ்ச் ஆர்டிஸ்ட் என்கிற டேக்லைனுடன் சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக இந்தப் படம் உருவாகி வருகிறது. இது துல்கர் சல்மான் ஹிந்தியில் நடிக்கும் அவரது மூன்றாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க துல்கர் சல்மானை ஏன் தேர்வு செய்தேன் என்பது குறித்து கூறியுள்ளார் பால்கி.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த நாட்டில் பாதிப்பேருக்கு தெரிந்த சிறந்த திறமையான நபராக, ஒரு சூப்பர்ஸ்டார் முகமாக இருக்க வேண்டும். அதேபோன்று இன்னும் நாட்டில் இருக்கும் பாதிப்பேருக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பாக தெரிய வேண்டும். அதே சமயம் தனது தாய் மொழியைப் போலவே ஹிந்தியில் நன்கு பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஹிந்தி சினிமாவுக்கு ஒரு புதுமுகம் ஆகவே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் துல்கர் சல்மான் தான் சரியாக பொருந்தி வந்தார். கொரோனா காலகட்டத்தில் அவரிடம் ஜூம் கால் வழியாகத்தான் பேசினேன். ஆனால் அவர் முழு கதையையும் கேட்கவே இல்லை. உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.