தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த இரண்டு தினங்களாக மகேஷ்பாபு புதிதாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள கைத்தறி நெசவு மேற்கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் விதமாகவும் மகேஷ்பாபு தன் மனைவியுடன் சேர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள நாராயணன்பேட் கிராமத்தைச் சேர்ந்த பெண் நெசவாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பதற்காக ஆருண்யா என்கிற ஆன்லைன் விற்பனை தளத்தை துவங்கியுள்ளனர். மகேஷ்பாபு இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, கிராமத்து பெண்களின் திறமையை, குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் வெளிக்கொண்டு வந்து சுயதொழில் மூலமாக அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் இந்த தளத்திற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல தனது மனைவி நம்ரதா சிரோத்கருடன் சம்பந்தப்பட்ட நெசவாளர் பெண்களையும் இந்த விற்பனை தளத்தின் பொறுப்பாளர்களையும் நேரிலேயே சந்தித்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.