'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'லைகர்'. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் முடிவுரையை எழுதிவிட்டார்கள் ரசிகர்கள். படத்தின் இயக்குனர் பூரி ஸ்கிரிப்ட்டை ஒழுங்காக எழுதாததே அதற்குக் காரணம்.
முதல் நாளிலேயே படம் அடி வாங்கியதால், படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், நஷ்ட ஈடு வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சார்மி கவுரிடம் பேசியதாகவும், ஆனால், அவர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை என்றும் சொன்னார்கள். அடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடமும் முறையிடும் வேலைகளும் நடந்தன. அவரை சந்திக்க மறுத்தால் தெலுங்கு பிலிம் சேம்பரிடம் புகார் அளிக்கப் போவதாக வினியோகஸ்தர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது. நேற்று முதல் வினியோகஸ்தர்களுக்கு ஏரியா வாரியாக நஷ்டத் தொகையை வழங்கி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'ஆச்சார்யா' படத்தின் படுதோல்விக்குப் பிறகு இப்படி நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. அதற்கடுத்து 'லைகர்' படத்திற்கு வழங்கப்படுகிறது.