டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த பிரச்னைகள் முடிந்துள்ள நிலையில் வருகிற 7ம் தேதி படம் வெளிவரும் என்றும், இப்படத்தை ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்குவதாகவும் கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘தடை பல கடந்து உங்கள் ‘விஸ்வரூபம்’ வரும் வியாழக்கிழமை 7ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. நீதி சற்றே நின்று வந்தாலும், அன்றே ஆவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக இந்திய மக்களுக்கும், என்னை தேடி வந்து ஆறுதல் சொன்ன தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், எனக்கு தெரியாமலே எனக்காக போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி.
என் உரிமையைத் தமதெனக்கருதி, பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் ஒரு இந்தியனாக ஆழ்மனதிலிருந்து நன்றி.எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை ஏற்ற நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து, காதலாகி, கண்ணீர் மல்கி நிற்கின்றேன். என் தமிழக மக்கள் காசோலைகளையும், பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து, கலங்காதீர் ‘‘யாமிருக்க பயமேன்’’ என்ற அர்த்தத்தில் கடிதங்கள் இணைத்து அனுப்பி உள்ளனர். நெஞ்சு விம்மிக் கண்ணீர் காட்சியை மறைக்க என் மனது
‘‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்’’ என்று கேவிக்கேவி பாடியது. என் கலையையும், அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் அன்றி வேறொன்றும் செய்வதறியேன். காசோலைகளையும், பணத்தையும் அன்புடன் திருப்பி அனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும், அரசியலும் என்னை வரியவனாக்கினாலும், உண்பதற்கும் ஒதுங்குவதற்கும் அரிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது என்ற தைரியத்தில் இதை செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும், என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.பொறுமை காத்த என் ரசிக நற்பணியாளர்களுக்கு பெருவணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர் காரணத்தை செயலாக்கிக்காட்டி ரவுத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம் பெறும்.
வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை என்பதை ஊருக்கு எடுத்துக்காட்டிய என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். ‘‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்தமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு.’’என்று கூறியுள்ளார்.