பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய்க்கு முதன் முதலாக தான் தமிழில் டப்பிங் கொடுத்திருப்பதாக நடிகை தீபா வெங்கட் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்து இருக்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி, என தெரிவித்துள்ளார் தீபா வெங்கட்.