டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னத்தின் கடல் படத்தில், இயேசு பிரான் படத்தை உடைப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி அப்படத்தை தடை செய்ய இந்திய கிறிஸ்தவ ஜனநாய கட்சியினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். தங்களது மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படம் சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் பல காட்சிகள் கிறிஸ்தவர்களை புண்படுத்தும்படி படமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பைபிள் கல்லூரியில் படிக்க வரும் அரவிந்த்சாமியிடம், அர்ஜூன் இயேசுவுக்கு தம்பி சாத்தான் என்று கூறியிருக்கிறார். மேலும் அர்ஜூன் அடிக்கடி தன்னை சாத்தான் என்று கூறுகிறார். ஆனால் அவரது பெயரோ பெர்க்மான்ஸ், இந்தப்பெயர் கிறிஸ்தவ பாடகரின் பெயர். அதேப்போல் படத்தின் நாயகன் இயேசு படத்தை போட்டு உடைப்பதும், அவர் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து தனது கையில் படிந்து இருக்கும் ரத்தம் இயேசுவின் ரத்தம் என்று கூறுகிறார். இப்படி பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க வேண்டும். கிறிஸ்தவர்களை புண்படும்படி படம் எடுத்த மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.