ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செகண்ட் இன்னிங்சிலும் அஜீத்துடன் ஜோடி சேர்ந்து விட்டார் நயன்தாரா. பெரும்பாலும் நடிகைகளைப்பொறுத்தவரை முதல் ரவுண்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேருவார்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அதுபோன்ற வாய்ப்புகள் அவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும. ஆனால் நயன்தாரா விசயத்தில் இது நேர்மாறாகி விட்டது. இப்போதும் முன்பு நடித்த அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்களும் அவருடன் நடிக்கத் துடிக்கின்றனர். இதனால் வெளியில் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கிறார் நயன்.
அதுமட்டுமின்றி, முதிர்ச்சியான நடிகர்களுடன் நடிக்க தன்னிடம் யாராவது கதை சொல்ல வந்தால் அந்த கதைகளை தவிர்க்காமல் கேட்கிறார். பின்னர் வேறு காரணங்களை சொல்லி தவிர்த்து விடுகிறார். அதேசமயம் இளவட்ட நடிகர்களின் படங்கள் என்றால் கதையில் தனக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்றபோதும் பட வாய்ப்புகளை கைப்பற்றி விடுகிறார். இப்படி இரண்டாவது ரவுண்டிலும் சாகச நடிகையாக திகழும் நயன்தாரா, பில்லா படத்தில் நடித்ததை விடவும், இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வரும் படத்தில் பன்மடங்கு சிறப்பாக நடித்திருக்கிறாராம். இதை அனுபவரீதியாக உணர்ந்த அஜீத்தே, பல காட்சிகளில் நடித்தபோது நயன்தாராவை மனதார பாராட்டியிருக்கிறார்.