பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
முஸ்லிம் அமைப்புகளுடன் கமல் பேசி ஒரு சுமூக முடிவு எடுத்துவிட்டதால் விஸ்வரூபம் படம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம் மதத்தவரை தவறாக சித்தரிப்பாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து கமல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனிநபர் நீதிபதி வெங்கட்ராமன் இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். இருந்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததால் இப்படத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் அமைப்புகளுடன் கமல் பேசி சர்ச்சைக்குரிய சில காட்சிகளையும், ஒலி அமைப்புகளையும் நீக்குவதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட 144 தடையையும் மாவட்ட கலெக்டர்கள் நீக்கினர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கமல் தரப்பிலும், முஸ்லிம் அமைப்பு தரப்பிலும் மற்றும் அரசு தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அனைத்தையும் வாபஸ் பெறுவதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதி இவ்வழக்கை வாபஸ் பெறுவதற்கான அனுமதியை வழங்கினார். இதனையடுத்து விஸ்வரூபம் படம் தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் நடவடிக்கைகளில் கமல் இறங்கியுள்ளார். இதனையடுத்து இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.