'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 மற்றும் கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. தனுசை பிரியப்போவதாக அறிவித்த பிறகு ஹிந்தி படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, கோவில்களில் வழிபாடு நடத்தும் வீடியோக்கள் மற்றும் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் தற்போது சில கோப்புகள் அடங்கிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு பேனாவைக் கொண்டு கதை எழுதுவது ஒருவித உணர்வு. முதன்முதலாக கதையை எழுதிவிட்டு இரண்டாவதாக தட்டச்சு செய்யும்போது சில மாற்றங்களை செய்வது வழக்கமானதாகும். காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும் போது அதில் இருந்து ஒரு பேப்பரைக் கூட தூக்கி எறிய மனம் வராது. ஒவ்வொரு முறையும் நீங்கள் படிக்கும் போது அதில் ஏதாவது புதிய சிந்தனை வரலாம். அதனை அப்டேட் செய்து கொண்டிருக்கவே விரும்புவோம் என்று பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.