ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டாக்டர் ராஜசேகர் நடித்து தமிழ் நாட்டில் சக்கைபோடு போட்ட படம் "இதுதாண்டா போலீஸ்". 20 வருடங்களுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தில் நடித்தார் ராஜசேகர். தமிழில் "இதுதாண்டோ போலீஸ்-2" என்றும் தெலுங்கில் "மகான்காளி" என்று பெயர் வைத்து படத்தை ஆரம்பித்தார். அவர் மனைவி ஜீவிதாவே இயக்குனர். சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது சண்டைக் காட்சியில் கை மற்றும் கால் எலும்புகள் முறிந்து இரண்டு மாதங்கள் வரை ஓய்வெடுத்தார். அதன் பிறகு பணப்பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நின்று விட்டது. தற்போது வேறு சில தயாரிப்பாளர்கள் படத்தை தொடர முன்வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் மகான்காளியை மீண்டும் தொடங்கி விட்டார் டாக்டர் ராஜசேகர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார். இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மதுரிமா நடிக்கிறார்.