கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி விட்டார். அதன் பிறகு அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகி விட்டார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் அயலான், பிரின்ஸ் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . காரணம் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி சிவகார்த்திகேயன், ஆர்த்தி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் அவர்கள் இன்று 12வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு, ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.