வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
தமிழ் சினிமாவில் ரசிகர்களை படம் பார்க்க தியேட்டர்களுக்கு அழைக்க படத்தில் கதை மட்டும் இருந்தால் போதாது வித்தியாசமான தலைப்பும் இருக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர் இன்றைய இயக்குனர்கள். அந்தவகையில் வித்தியாசமான கதையுடனும், வித்தியாசமான தலைப்புடனும் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் பண்ணையாரும் பத்மினியும்...! தலைப்பை பார்த்ததும் ஏதோ பண்ணையாருக்கும், பத்மினி என்ற பெண்ணுக்கும் தொடர்பான கதை என்று எண்ணிவிடாதீர்கள். ஒரு பண்ணையாரும் அவர் வாங்கும் காரான பத்மினி என்பதையும் தான் படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள். குறும்பட தயாரிப்பில் நாளைய இயக்குனர் பார்ட்-2 வில் வெற்றி பெற்ற இயக்குனர் அருண் குமார் தான் இப்படத்தை இயக்க உள்ளார். படத்தின் கதை 1995-ல் மதுரை பக்கம் உள்ள ஒரு சிறு கிராமத்தில் துவங்குகிறது.
இந்த படத்தில் பண்ணையாரான ஜெய்பிரகாஷ் ஒரு கார் வாங்குகிறார். அவருக்கு கார் ஓட்ட தெரியாததால் அவருக்கு டிரைவராக விஜயசேதுபதி வருகிறார். படத்தின் திரைக்கதை மொத்தமும் இந்த கார் உடனே நகருகிறது. அதோடு விஜய் சேதுபதிக்கும், ஹீரோயினுக்கும் இடையேயான காதலும் கலந்து கட்டி இப்படத்தை இயக்குகிறார் அருண். முதல்படமே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் தான் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகும், அதனால் தான் இந்த புதுகளத்தை படமாக்கி வருகிறேன் என்கிறார் டைரக்டர்.