தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்டூடண்ட் நம்பர்-1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிபிராஜ். தொடர்ந்து ஜோர், லீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தற்போது கைவசம் ஒரு படம்கூட இல்லை. பல படங்களில் நடித்து தன்னை நிரூபித்து விட்டபோதும் யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பதால் மனசொடிந்து போயிருக்கிறார் சிபிராஜ். என்றாலும், தனது திரையுலக நண்பர்களான பிரசன்னா, ஷக்தி போன்ற நடிகர்கள் நடிக்கும் பட ஸ்பாட்டுகளுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் அவர், மீண்டும் படங்களில் நடித்து எனக்கென ஒரு இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று உறுதியுடன் பேசி வருகிறார்.
அவரிடத்தில் அடுத்து எந்த மாதிரியான கதைகளில் நடிக்க முடிவெடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், கார்த்தி நடித்த பருத்திவீரன் மாதிரி கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கிராமிய கதைகளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கும். அதனால் அந்த மாதிரியான மாறுபட்ட கதைகளை தேடுகிறேன் என்று சொல்லும சிபிராஜ், சினிமா சிலகாலம் என்னை வெளியேற்றினாலும், மீண்டும் அரவணைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது என்கிறார்.