Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் - கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு

03 ஆக, 2022 - 15:15 IST
எழுத்தின் அளவு:
Kanal-Kannan-speech-turn-as-Controversy

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் கடந்த ஒரு மாதமாக இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுக்க நடந்தது. இதன் நிறைவு விழா சென்னை அருகே நடந்தது. இந்தக்கூட்டத்தில் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறுகையில், ‛‛இந்துவாக இருப்பதே பெருமை. ஒருகாலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு நாடுகளை பிடித்தனர். இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடுகளை பிடிக்கின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்கின்றனர். அப்படி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை(ஈ.வே.ராமசாமி) என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்'' என்றார்.

கனல் கண்ணன் குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பு ஈ.வே.ராமசாமி சிலை உள்ளது. அதை உடைக்க வேண்டும் என அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (61) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் 3 ஹீரோயின்களுடன் நடிக்கும் அசோக் செல்வன்மீண்டும் 3 ஹீரோயின்களுடன் நடிக்கும் ... இந்த வாரம் வரிசை கட்டும் படங்கள் இந்த வாரம் வரிசை கட்டும் படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (61)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
04 ஆக, 2022 - 22:03 Report Abuse
தாமரை மலர்கிறது சிலர் சர்ச்சையாக பேசினால் பிரபலம் அடையலாம் என்று பேசுகிறார்கள். கனல் கண்ணனின் பேச்சும் இவ்வகைதான். கோவிலுக்கு வரும் பலர் இறைவனின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதே மாதிரி பெரியாரின் மீதும் மரியாதை வைத்துள்ளார்கள் என்பதை அவர்களை கனல் கண்ணன் கேட்டாலே புரிந்து கொள்வார். இது எப்படி எதிரும் புதிரும் என்று வியப்பாக இருக்கலாம். உலகம் எப்போதும் வியப்பு தான். எல்லாவற்றிலும் எல்லோரும் ஒரே மாதிரி சிந்தனை கிடையாது. சர்ச்சை பேச்சு போகாத ஊருக்கு வழி காட்டும். பிஜேபிக்காரர்கள் பெரியாரை இகழ வேண்டிய அவசியம் இல்லை.
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
04 ஆக, 2022 - 13:32 Report Abuse
Vena Suna ஈவேரா என்பவர் தான் தனிப்பட்ட முறையில் அவமானப்பட்டதை மனதில் வைத்து, ஒரு சமூகமே மோசம் என்று வன்மம் கொண்டு, அந்த சமயம் எந்த மதமோ, அந்த மதமும் மோசம் என்று தனது பண பலம், பேசும் திறமை வைத்து கொண்டு தான் ஏதோ தலைவர் என்று போல் நிலைநாட்டி கொண்டார். அவர் சுதந்திர போராட்டம் செய்யவில்லை. வேறு பலர் செய்த வைக்கோம் போராட்டத்தில் கொஞ்சம் தலையை காட்டி வைக்கம் வீரர் என்று பெயர் வாங்கி கொண்டார். அறியாமையில் இருந்த மக்களிடையே பொய்யான வெறுப்புக்களை மூட்டி, அவர்கள் நிம்மதியை கெடுத்து, கோபத்தை மூட்டி, அவர்கள் கடவுள் நம்பிக்கையை ஒழித்து, அவர்கள் வாழ்க்கையை கெடுத்தார் ஈவேரா. அவரை பெரியார் என்று சொல்வதே தப்பு. தீண்டாமை என்று சொன்னவர் ப்ராஹ்மணர்களை மட்டும் தாக்கினார். வேறு பல உயர்ந்த ஜாதிகளை தாக்க துணிவு இல்லை. அவர் ஒரு கன்னட வம்சத்தை சேர்ந்தவர். தமிழர்களை கெடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.தெலுங்கர்கள் அவர் பெயரை சொல்லி சொல்லி தமிழர்களை கொள்ளை அடித்துள்ளனர்.
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
04 ஆக, 2022 - 13:12 Report Abuse
தஞ்சை மன்னர் இவனின் முந்தய கருத்துக்களை படங்களில் பாருங்கள் கடவுள் எதிர்ப்பு பற்றி பேசி இருப்பான்
Rate this:
Nesan - KARAIKUDI,இந்தியா
04 ஆக, 2022 - 13:11 Report Abuse
Nesan சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் நானும் இதை வவேற்கிறேன்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
04 ஆக, 2022 - 13:02 Report Abuse
தமிழ்வேள் இருக்கும் ஒன்றைத்தான் இல்லை என்று மறுக்க இயலும் ....இல்லை என்று சொல்லும்போதே , அப்படி மறுக்கப்பட்டது உள்ளது என்பது மறுதலிப்பவரால் ஒப்புக்கொள்ளப்படுகிறது .......கடவுள் இல்லை வாசகம் இந்து கோவில்கள் முன்பு மட்டும் வைக்கப்படுவது , கடவுள் கோவில் இருக்கிறார் என்று ஒப்புக்கொள்வது ஆகிறது ..ஆக , மசூதி , சர்ச்சுகளில் முன்பு இந்த கடவுள் மறுப்பு வாசகம் , சிலை இல்லாமையால் , அங்கு கடவுளின் இருப்பு இல்லை என்பது உறுதியாகிறது .....பெரியார் கும்பலின் லாஜிக் , சிறிது ஆராய்ந்து பார்த்தால் , அவர்களுக்கு எதிராக , அவர்களின் ஆதரவைப்பெற்ற சிறுபான்மை மதங்களால் மிகவும் வன்மையாக எதிர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது நன்றாக தெரிகிறது ....இந்துக்களுக்கு உதவி புரிவதற்கு பெரியார் கும்பலுக்கு நன்றி ....
Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in