தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமலுக்கு எழுந்துள்ள விஸ்வரூபம் பட பிரச்னைக்கு திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷூம் தன் பங்கிற்கு உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியவர் கமல். அருக்கே இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகி இருக்கிறது என்று எண்ணும்போது கஷ்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டை விட்டே அவர் போகிறேன் என்று அவர் சொன்னதும் என் இதயத்தில் ரத்தம் கசிந்தது என்று கூறியுள்ளார்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பேசும்போது, இது மிகவும் துரதிர்ஷ்டமானது. சினிமாவுக்காக வாழ்பவர் கமல். அவரது பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு என்றார்.