பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கமலுக்கு எழுந்துள்ள விஸ்வரூபம் பட பிரச்னைக்கு திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷூம் தன் பங்கிற்கு உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியவர் கமல். அருக்கே இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகி இருக்கிறது என்று எண்ணும்போது கஷ்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டை விட்டே அவர் போகிறேன் என்று அவர் சொன்னதும் என் இதயத்தில் ரத்தம் கசிந்தது என்று கூறியுள்ளார்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பேசும்போது, இது மிகவும் துரதிர்ஷ்டமானது. சினிமாவுக்காக வாழ்பவர் கமல். அவரது பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு என்றார்.