ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
இந்தி விஸ்வரூபத்திற்காக மும்பை சென்று இருக்கும் கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, எனது படத்தை தடை செய்தது எனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல தேசத்திற்கு ஏற்பட்ட அவமானம். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் கொடுத்த ஆதரவால் தான் இப்போது நான் இங்கு நிற்கிறேன். நான் யாரையும் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தை பார்க்காமலேயே சிலர் படத்தில் தவறான காட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தபடத்திற்கு நான் எதிர்கொள்ளும் பிரச்னை மத ரீதியானது கிடையாது. அரசியல் ரீதியான பிரச்னை.
இதுபோன்று ஒருநிலை மீண்டும் ஏற்பட்டால் நிச்சயம் இந்தியாவை விட்டே நான்
வெளியேறுவேன், அதில் மாற்றமேயில்லை. இப்படி பேசுவதால் நான் மிரட்டுவதாக
யாரும் எண்ணம் வேண்டாம், கோபம் தான் வருகிறது. விஸ்வரூபம் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தபடத்தின் மூலம் நான் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதாக சிலர் கூறுகின்றனர். நிச்சயமாக கிடையாது. சரியான தேதியில் படம் ரிலீஸ் ஆகாததால் தனக்கு ரூ.30 கோடி முதல் 60 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தயது செய்து கலைஞர்களை இதுபோன்று புண்படுத்தாதீர்கள் என்றார்.