கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! | சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! |
இந்தி விஸ்வரூபத்திற்காக மும்பை சென்று இருக்கும் கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, எனது படத்தை தடை செய்தது எனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல தேசத்திற்கு ஏற்பட்ட அவமானம். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் கொடுத்த ஆதரவால் தான் இப்போது நான் இங்கு நிற்கிறேன். நான் யாரையும் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தை பார்க்காமலேயே சிலர் படத்தில் தவறான காட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தபடத்திற்கு நான் எதிர்கொள்ளும் பிரச்னை மத ரீதியானது கிடையாது. அரசியல் ரீதியான பிரச்னை.
இதுபோன்று ஒருநிலை மீண்டும் ஏற்பட்டால் நிச்சயம் இந்தியாவை விட்டே நான்
வெளியேறுவேன், அதில் மாற்றமேயில்லை. இப்படி பேசுவதால் நான் மிரட்டுவதாக
யாரும் எண்ணம் வேண்டாம், கோபம் தான் வருகிறது. விஸ்வரூபம் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தபடத்தின் மூலம் நான் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதாக சிலர் கூறுகின்றனர். நிச்சயமாக கிடையாது. சரியான தேதியில் படம் ரிலீஸ் ஆகாததால் தனக்கு ரூ.30 கோடி முதல் 60 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தயது செய்து கலைஞர்களை இதுபோன்று புண்படுத்தாதீர்கள் என்றார்.