டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தி விஸ்வரூபத்திற்காக மும்பை சென்று இருக்கும் கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, எனது படத்தை தடை செய்தது எனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல தேசத்திற்கு ஏற்பட்ட அவமானம். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் கொடுத்த ஆதரவால் தான் இப்போது நான் இங்கு நிற்கிறேன். நான் யாரையும் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தை பார்க்காமலேயே சிலர் படத்தில் தவறான காட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தபடத்திற்கு நான் எதிர்கொள்ளும் பிரச்னை மத ரீதியானது கிடையாது. அரசியல் ரீதியான பிரச்னை.
இதுபோன்று ஒருநிலை மீண்டும் ஏற்பட்டால் நிச்சயம் இந்தியாவை விட்டே நான்
வெளியேறுவேன், அதில் மாற்றமேயில்லை. இப்படி பேசுவதால் நான் மிரட்டுவதாக
யாரும் எண்ணம் வேண்டாம், கோபம் தான் வருகிறது. விஸ்வரூபம் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தபடத்தின் மூலம் நான் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதாக சிலர் கூறுகின்றனர். நிச்சயமாக கிடையாது. சரியான தேதியில் படம் ரிலீஸ் ஆகாததால் தனக்கு ரூ.30 கோடி முதல் 60 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தயது செய்து கலைஞர்களை இதுபோன்று புண்படுத்தாதீர்கள் என்றார்.