அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டைரக்டர் சஞ்சய்ராம் இயக்கி தயாரித்து வரும் குற்றாலம் படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சியில் 200 அடி நீள டயலாக்கை ஒரே டேக்கில் உணர்ச்சி பொங்க பேசி நடித்தார் நடிகை சவுகந்தி. இதற்காக டைரக்டர் சஞ்சய்ராமும் படக்குழுவினரும் கரகோஷம் செய்து பாராட்டியுள்ளனர். குற்றாலம் படத்தில் நடிகை சவுகந்தியின் நடிப்பு பற்றி டைரக்டர் சஞ்சய்ராம் கூறுகையில், காட்சிகளை சட்டென புரிந்து கொண்டு கேரக்டருக்குள் ஒன்றி விடும் நடிகை என்பதால், கதை முடிவானதும் என் நாயகி கேரக்டருக்கு சவுகந்தி தான் சரியாக இருப்பார் என முடிவு செய்தேன். என் எதிர்பார்ப்பை அப்படியே நிறைவேற்றி விட்டார். படத்தின் உயிர்த்துடிப்பான கிளைமாக்சில் 200 அடி நீள காட்சிக்கான டயலாக்கை உணர்ச்சிப் பிழம்பாகவே மாறி அவர் நடித்து முடித்தபோது நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த யூனிட்டும் கரகோஷம் செய்து பாராட்டினோம், என்றார்.
படத்தில் பூ விற்கும் துடிப்பான பெண் கேரக்டரில் சவுகந்தி வருகிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் வாலி நடிக்கிறார். படப்பிடிப்பை குற்றாலம், தென்காசி, கேரளாவில் உள்ள அச்சன்கோவில் ஆகிய இடங்களில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர்.