ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
இந்தியில் வெளியான டில்லி பெல்லி படம் தற்போது தமிழில் சேட்டையாக ரீமேக் ஆகியுள்ளது. கண்டேன் காதலை படத்தை இயக்கிய கண்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை (புதன்கிழமை) சென்னையில் இப்படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. அப்போது, விழா மேடையில் ஆர்யாவின் இரண்டு புறமும் ஹன்சிகா, அஞ்சலி இருவரையும் உட்கார வைத்திருந்தனர். அப்போது, தனது வலப்புறத்தில் அமர்ந்திருந்த அஞ்சலி பக்கம் திரும்பாமல், வலது புறத்தில் அமர்ந்திருந்த ஹன்சிகாவிடமே ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார் ஆர்யா.
இதை அவ்வப்போது கவனித்த அஞ்சலியின் முகத்தில் கடும் கோபம் தாண்டவமாடியது. என்றாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். அதோடு, விழாவில் பேசியவர்கள் அனைவருமே, ஹன்சிகாவின் பெயருக்குப்பிறகே தன்னை குறிப்பிட்டதாலும் செம டென்சனில் அமர்ந்திருந்த அஞ்சலி, விழா முடிந்ததும் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து வெளியேறி விட்டார். ஆனால் அப்போதும்கூட அனைவரும் ஹன்சிகாவிடம்தான் குழைந்து குழைந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும் ஆர்யா, இன்னும் ஹன்சிகாவுடனான பேச்சை தொடர்ந்தபடியே, விழா ஹாலுக்கு வெளியே வந்தும் கடலை போட்டுக்கொண்டிருந்தார்.