ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புதுமுகங்கள் ஆதித்யா, நிவேதா, கமலி நடிக்கும் படம் மறு விசாரணை. வி.எஸ்.விஜயகோபால் இயக்குகிறார். மதுரை அருகே உள்ள அழகர் கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் வி.எஸ்.விஜயகோபால். மேலும் அவர் மேலும் கூறியதாவது: நான் படிக்கும் காலத்தில் 5 வருடங்கள் சிறையில் இருந்த ஒரு டாக்டரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. அப்படியென்றால் அவர் சிறையில் வாழ்ந்த 5 வருட வாழ்க்கையை யாரால் திருப்பித் தரமுடியும் என்பதை யோசித்தேன். அதுதான் இந்தப் படம். அவர் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சிறைக்கு அனுப்பப்படுகிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை சொல்வதால் படத்துக்கு மறு விசாரணை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதை கிராமத்து க்ரைம் த்ரில்லர் என்று சொல்லலாம். ஷூட்டிங்கெல்லாம் முடிந்து விட்டது. பிப்ரவரியில ரிலீஸ் பண்ணப்போறோம் என்கிறார்.