ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமுகங்கள் ஆதித்யா, நிவேதா, கமலி நடிக்கும் படம் மறு விசாரணை. வி.எஸ்.விஜயகோபால் இயக்குகிறார். மதுரை அருகே உள்ள அழகர் கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் வி.எஸ்.விஜயகோபால். மேலும் அவர் மேலும் கூறியதாவது: நான் படிக்கும் காலத்தில் 5 வருடங்கள் சிறையில் இருந்த ஒரு டாக்டரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. அப்படியென்றால் அவர் சிறையில் வாழ்ந்த 5 வருட வாழ்க்கையை யாரால் திருப்பித் தரமுடியும் என்பதை யோசித்தேன். அதுதான் இந்தப் படம். அவர் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சிறைக்கு அனுப்பப்படுகிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை சொல்வதால் படத்துக்கு மறு விசாரணை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதை கிராமத்து க்ரைம் த்ரில்லர் என்று சொல்லலாம். ஷூட்டிங்கெல்லாம் முடிந்து விட்டது. பிப்ரவரியில ரிலீஸ் பண்ணப்போறோம் என்கிறார்.