'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுகங்கள் ஆதித்யா, நிவேதா, கமலி நடிக்கும் படம் மறு விசாரணை. வி.எஸ்.விஜயகோபால் இயக்குகிறார். மதுரை அருகே உள்ள அழகர் கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் வி.எஸ்.விஜயகோபால். மேலும் அவர் மேலும் கூறியதாவது: நான் படிக்கும் காலத்தில் 5 வருடங்கள் சிறையில் இருந்த ஒரு டாக்டரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. அப்படியென்றால் அவர் சிறையில் வாழ்ந்த 5 வருட வாழ்க்கையை யாரால் திருப்பித் தரமுடியும் என்பதை யோசித்தேன். அதுதான் இந்தப் படம். அவர் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சிறைக்கு அனுப்பப்படுகிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை சொல்வதால் படத்துக்கு மறு விசாரணை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதை கிராமத்து க்ரைம் த்ரில்லர் என்று சொல்லலாம். ஷூட்டிங்கெல்லாம் முடிந்து விட்டது. பிப்ரவரியில ரிலீஸ் பண்ணப்போறோம் என்கிறார்.