'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"விஸ்வரூபம் படம் வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, தமிழக முஸ்லிம் சிந்தனையாளர்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் அமீது வெளியிட்டுள்ள அறிக்கை: குரானையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையில், விஸ்வரூபம் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இத்தடையை, நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன்பின்பும், அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என, மேல்முறையீடு செய்து தடை பெற்றதுள்ளது, சந்தேகங்களை எழுப்புகிறது. நபிகளுக்கும், அவரை ஏற்க மறுத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், சமூக நல்லிணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில், வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சட்டம்,ஒழுங்கைக் காரணம் காட்டி, விஸ்வரூபம் படம் வெளியாக தடை விதிப்பதை, பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனவே, சமூக நல்லிணக்கத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும், விஸ்வரூபம் படம் தடையின்றி வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இவ்வாறு, அப்துல் அமீது கூறியுள்ளார்.