டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"விஸ்வரூபம் படம் வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, தமிழக முஸ்லிம் சிந்தனையாளர்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் அமீது வெளியிட்டுள்ள அறிக்கை: குரானையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையில், விஸ்வரூபம் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இத்தடையை, நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன்பின்பும், அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என, மேல்முறையீடு செய்து தடை பெற்றதுள்ளது, சந்தேகங்களை எழுப்புகிறது. நபிகளுக்கும், அவரை ஏற்க மறுத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், சமூக நல்லிணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில், வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சட்டம்,ஒழுங்கைக் காரணம் காட்டி, விஸ்வரூபம் படம் வெளியாக தடை விதிப்பதை, பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனவே, சமூக நல்லிணக்கத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும், விஸ்வரூபம் படம் தடையின்றி வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இவ்வாறு, அப்துல் அமீது கூறியுள்ளார்.