ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சிம்பு 40 வயதை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னும் திருமணம் செய்யவில்லை. அவருக்கு ஏற்ற மணப்பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறியவர், மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கும் டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடத்தில் சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‛‛திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் கடவுள் எழுதினால் தான் திருமணம் நடக்கும். நிச்சயமாக சிம்புவின் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மணப்பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக என் வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளை இறைவன் அனுப்ப வேண்டும் என நான் வேண்டுகிறேன். மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து கடவுள்களிடம் இதுகுறித்து பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார் டி.ராஜேந்தர்.