தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயற்கை, ஈ, பேராண்மை என்ற ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். பேராண்மைக்கு பிறகு அடுத்து அவர் படம் இயக்கவில்லை. அவரது உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி வரும் பூலோகம் படத்துக்கு வசனம் எழுதுகிறார். அடுத்த படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் அதன் திரைக்கதை அமைக்கும் பணியை செய்து வந்தார். ஜனநாதனின் அடுத்த படத்தில் ஜீவாவும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கிறார்கள். இதற்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஜீவாவும், ஜெயம்ரவியும் இதனை தங்களின் மீடியா நேர்காணலில் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா ஈ படத்திலும், ஜெயம்ரவி பேராண்மை படத்திலும் நடித்தனர். இரண்டு ஹீரோக்களுக்கும் அவைகள் வெற்றிப் படமாக அமைந்தது. அதோடு இருவரையும் ஆக்ஷன் ஹீரோக்காளக்கியது. அதனால் இருவருமே அவரது படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். தொடர்ச்சியான கால்ஷீட் தேவை என்பதால் கைவசம் உள்ள படத்தை அவர்கள் முடிக்கட்டும் என்று ஜனநாதன் காத்திருந்தார். அதோடு படத்தின் பட்ஜெட் பெரியது என்பதால் தயாரிப்பாளர் கிடைப்பது சிரமமாக இருந்தது. இப்போது தயாரிப்பாளர் கிடைத்து விட்டதால் படத்தை துவங்கும் பணிகளில் மும்முரமாகி விட்டார்.
தூக்குத் தண்டனை தேவையா? தேவையில்லையா? என்பது சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சினை. அதன் பின்னணியில்தான் ஜனநாதனின் அடுத்த படம் என்கிறார்கள். தூக்குத் தண்டனை அவசியம் என்ற கருத்தில் ஒரு ஹீரோவும், தூக்குத் தண்டனை கூடாது என்று ஒரு ஹீரோவும் அவரவர் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்வார்கள். இதில் எது சரி என்பதை தீர்மானிக்கிறது கிளைமாக்ஸ். இதுதான் கதை என்கிறது ஜனநாதனின் நெருங்கிய வட்டாரம்.
தற்போது "ஆதிபகவன்" படத்தை தயாரித்து வரும் அன்பழகன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது. படத்துக்கு "தூக்கு தண்டனை" என்றே பெயர் வைக்கவும் ஜனநாதன் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று தெரிகிறது. படத்தின் பெயரும் மாறலாம். ஆதிபகவன் வெளியாகி அதன்சக்சஸ் மீட்டில் அடுத்த படம் பற்றி அறிவிக்க அன்பழகன் முடிவு செய்திருப்பதால் இப்போதைக்கு எந்த தகவலும் வெளியே வராமல் ரகசியம் காக்கிறார்கள்.