‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
விஸ்வரூபம் படத்திற்கு சென்னை ஐகோர்ட் மீண்டும் தடை விதித்தைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமலின் பிரம்மாண்டத்தில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத்தொடர்ந்து இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து கமல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கிறதா என்று கடந்த 26ம் தேதி பார்த்து, பின்னர் நேற்று படத்துக்கான தடையை நீக்கி உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. வழக்கை நீதிகள் எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் படத்திற்கு மீண்டும் தடைவிதித்து இன்று (30.01.13)உத்தரவிட்டனர். இதனால் இப்படம் ரிலீஸ் ஆவதில்லை தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே கமல் காலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தான் இருக்கும் வீடு தனக்கு சொந்தமாக இருக்காது என்றும், தன்னை தமிழகத்தை விட்டே வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாகவும், தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால் தான் மதச்சார்ப்பற்ற வேறு ஒரு மாநிலத்திற்கோ அல்லது வேறுநாட்டிற்கோ போக நேரிடும் என்று உருக்கமா பேட்டியளித்தார். மேலும் பிற்பகலில் சில முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கவும் சம்மதம் தெரிவித்தார்.
இருந்தும் தற்போது அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை, இதனால் இனி சென்னை ஐகோர்ட்டை நம்பி பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்து சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளார்.