'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கவில்லை; கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் ஜாலியான படமாக இருந்ததால் அதில் நடித்தேன், என்று படத்தின் நாயகி விசாகா சிங் கூறியுள்ளார். பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன்பிறகு இந்தி, கன்னடம், ஆங்கில படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
இதுபற்றி விசாகா அளித்துள்ள பேட்டியில், மீண்டும் தமிழில் நடிக்க வருவேன் என்று எண்ணவில்லை. ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 3 பேர் என்னை காதலிப்பதுபோல் கதை. ரொம்பவும் ஜாலியான ஷூட்டிங். ஜாலியான கதை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் தேவதைபோல் அழகாக இருக்க வேண்டும் என்பதால் காஸ்டியூம் முதல் மேக்கப் வரை என் மீது கவனம் எடுத்துக்கொண்டனர், என்று கூறியுள்ளார்.