ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயம்ரவி நடிப்பில் அமீர் இயக்கியுள்ள படம் ஆதிபகவன். இது இதுவரை யாருமே தொடாத கதை. யாருமே படமாக்காத யுக்தி என்று சொல்லிக்கொண்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தை படமாக்கியிருக்கிறார் அமீர். இதற்காக ஜெயம்ரவியையும் வேறு படங்களில் நடிக்க விடாமல் இரண்டு வருடமாக அவரை கூடவே வைத்துக்கொண்டு படாக்கியிருக்கிறார்கள். அதோடு ஆடியோ ரிலீசையும் தமிழ் நாட்டில் நடத்தாமல் வெளிநாட்டில்தான் நடத்தினார்கள். காரணம், இதுவும் பெரிய ரேஞ்ச் படம் என்பதை உணர்த்ததானாம்.
ஆனால் இந்த படத்தை முடிப்பதற்குள் தயாரிப்பாளரும், திமுகவின் மாவட்ட செயலாளருமான அன்பழகனை செம தண்ணி காட்டி விட்டாராம் அமீர். காரணம், முதலில் ஒரு பட்ஜெட்டை சொல்லி தயாரிப்பாளரை வலையில் விழ வைத்த அமீர், பின்னர் போட்ட பட்ஜெட்டையும் தாண்டி பணத்தை தண்ணீராய் செலவழித்திருக்கிறார். ஜெயம்ரவிக்கு இருக்கிற வியாபாரத்தையும் விட பட்ஜெட் பன்மடங்கு கூடுதலாகியிருக்கிறது. அதைப்பார்த்து தயாரிப்பாளர் தடுமாறியபோது, ஜெயம் ரவியின் மார்க்கெட் மட்டுமின்றி, எனக்கும் ஒரு மார்க்கெட் இருக்கிறதல்லவா? கவலைப்படாதீர்கள். போட்ட பணத்தில் இரண்டு மடங்கு படம் வசூலித்துக்கொடுக்கும் என்று சொல்லி அவரை ஆப் பண்ணி வைத்துள்ளாராம் அமீர்.