'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் இயக்குனர், சுபாஷ் காய், வெள்ளித் திரைக்கு, புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில், பிரபலமானவர். இவர் அறிமுகப்படுத்திய, மனிஷா கொய்ராலா, மஹிமா சவுத்ரி போன்றவர்கள், பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். இதனால், இவர், ஒரு படம் எடுத்தாலே, அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் என,தெரிந்து கொள்வதில், பாலிவுட்டே
பரபரக்கும். சுபாஷ் காய், தற்போது,"கான்சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிப்பதற்கு, பொருத்தமான நடிகையை தேடி வந்தார். கடும் போராட்டத்துக்கு பின், கோல்கட்டாவை சேர்ந்த ஒரு ரசகுல்லாவை, அவர் தேர்வு செய்துள்ளார். அந்த ரசகுல்லாவின் பெயர், மிஸ்தி. இவரின் புகைப்படம், சமீபத்தில் மீடியாக்களில் வெளியாகியது.
இதுகுறித்து, சுபாஷ் காய் கூறுகையில், " இந்த படத்தில் நடிப்பதற்கு, 350 பெண்களுக்கு மேக்அப் போட்டு, டெஸ்ட் எடுத்தேன்.
யாருமே, திருப்தியாக இல்லை. இறுதியாக, இந்த பெண்ணை தேர்வு செய்தேன். இந்த பெண்ணின் முகம், எனக்கு மிகவும்
திருப்தியாக இருந்தது என்றார்.