இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
"விஸ்வரூபம் திரைப்படத்தை, தமிழக திரையரங்குகளில் வெளியிட தடை நீடிக்கும் நிலையில், பிப்., 2ம்தேதி, டி.டி.எச்., வாயிலாக வெளியிட கமல் தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. டி.டி.எச்., வாயிலாக ஒளிபரப்புவதை, மாநில அரசு தடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,ல் வெளியிட, கமல் முடிவு செய்ததால் தான், முதல் பிரச்னை எழுந்தது. "டி.டி.எச்.,ல் வெளியிட்டால், திரையரங்குகளில் வெளியிட மாட்டோம்; திரையரங்குகளில் முதலில் வெளியிட்ட பின், படம் ஓடுவதற்கு, கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பின்பே, டி.டி.எச்.,ல் வெளியிட வேண்டும் என, திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.
கமல் சமாதானம்: "டி.டி.எச்., புதிய தொழில்நுட்பம்; அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; டி.டி.எச்.,ல் படம் வெளியாவதால், திரையரங்கு வசூல் பாதிக்காது என, கமல் சமாதானம் செய்து பார்த்தார்.ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் விடாப்பிடியாக இருந்ததால், திரையரங்கில், ஜன., 25ம் தேதியும், டி.டி.எச்.,ல், பிப்., 2ம் தேதியும் வெளியாகும் என, கமல் அறிவித்தார்.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முஸ்லிம்களின் எதிர்ப்பால், விஸ்வரூபம் படத்திற்கு இரண்டு வார தடையை, தமிழக அரசு விதித்துவிட்டது. விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ராஜ்கமல், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தடை கோரி மனு: இந்த இக்கட்டான சூழலில், டி.டி.எச்., மூலம், பிப்., 2ம்தேதி விஸ்வரூபம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திரையரங்குகளில் வெளியிட மட்டுமே, தமிழக அரசால் தடை விதிக்க முடியும்.மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், "டிவி ஒளிபரப்புகளை கட்டுப்படுத்துவதால், டி.டி.எச்., ஒளிபரப்புக்கு தடை விதிக்க முடியாது என, தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. "விஸ்வரூபம் படத்தை வெளியிட, எந்ததெந்த, டி.டி.எச்., நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனரோ, அந்த நிறுவனங்களுக்கு, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, முஸ்லிம்கள் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விதி உள்ளது : இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல், பல நாடுகள் விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதித்துள்ளன. இந்நிலையில், செயற்கைகோள் ஒளிபரப்பில், ஒருபகுதிக்கு மட்டும் தடை செய்ய முடியுமா என்ற கேள்வியை, சைபர் கிரைம் அதிகாரிகள் எழுப்புகின்றனர். ஜாதி, மத உணர்வுகளை புண்படுத்துதல், பெண்கள், குழந்தைகளை பாதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல், தனிப்பட்டவரின் சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெறுதல் ஆகியவற்றுக்கு, தொலைத் தொடர்பு ஒளிபரப்பு ஆணையம் தடை விதிக்கிறது. எனவே, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விஸ்வரூபம் படம் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு, ஒழுங்குமுறை ஆணை விதி ஒத்துவருவதால், டி.டி.எச்.,ல் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்படும் என, கேபிள் எம்.எல்.ஓ.,க்கள் தெரிவிக்கின்றனர்.
நஷ்டத்தை தடுக்க: படத்தை, 100 கோடி ரூபாயில் தயாரித்து, திரையிட தாமதம் ஆவதால், பெரும் நஷ்டம் கமலுக்கு ஏற்படுகிறது. கோர்ட் போராட்டத்தைக் கடந்து, படம் வெளியாவதற்கு நீண்ட காலம் ஆகும்.மேலும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குதல், அதற்கு ஏற்றாற் போல் படத்தை முழுமைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு அவகாசம் தேவைப்படும். எனவே, டி.டி.எச்., வாயிலாக படத்தை வெளியிட, கமல் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -