பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
விஸ்வரூபம் படம் தொடர்பாக இன்று முக்கிய தீர்ப்பு வெளியாகும் என்று இருந்த நிலையில் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. கமல் இயக்கி, நடித்து, அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர இந்தியாவின் பிறமாநிங்களிலும், வெளிநாடுகளிலும் கடந்த 25ம் தேதி ரிலீசானது. படத்தில் முஸ்லிம் அமைப்புகளை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைதொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை 2 வார காலத்திற்கு தடை செய்துள்ளது தமிழக அரசு. இதே கோரிக்கையை ஏற்று புதுச்சேரியிலும் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தை தடை செய்ததை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வெங்கட்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏதும் உள்ளதா என்பதை ஆராய 26ம் தேதி நீதிபதி வெங்கட்ராம்க்கு சிறப்பு காட்சியாக விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்கை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளுது.
சமரச பேச்சு...? இதற்கிடையே விஸ்வரூபம் படம் விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், அரசு அதிகாரிகளையும், முஸ்லிம் அமைப்புகளையும் சந்தித்து பேசப்போவதவாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மனு: இந்நிலையில், கமலின், ராஜ்கமல் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், விஸ்வரூபம் படத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த தடையை உடனே நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : விஸ்வரூபம் படம் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு இன்று வழங்கப்படலாம் என்ற சூழ்நிலையில் ஏராளமான கமல் ரசிகர்களும், முஸ்லிம் அமைப்பினரும் கோர்ட் வளாகத்தில் கூடியிருந்தனர். இதனால் பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ஐகோர்ட் செல்லும் அனைத்து வழிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.