கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
விஸ்வரூபம் படம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் நள்ளிரவு சென்னை திரும்பினார். கமல் இயக்கி, நடித்து, அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர இந்தியாவின் பிறமாநிங்களிலும், வெளிநாடுகளிலும் கடந்த 25ம் தேதி ரிலீசானது. படத்தில் முஸ்லிம் அமைப்புகளை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைதொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை 2 வார காலத்திற்கு தடை செய்துள்ளது தமிழக அரசு. இதே கோரிக்கையை ஏற்று புதுச்சேரியிலும் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தை தடை செய்ததை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார். முன்னதாக இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏதும் உள்ளதா என்பதை ஆராய 26ம் தேதி நீதிபதி வெங்கட்ராம்க்கு சிறப்பு காட்சியாக விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது.
சென்னை திரும்பினார் கமல் : விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் திரையிடுவது தொடர்பாக கடந்த 23ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றார் கமல். அங்கு படத்தை வெற்றிகரமாக திரையிட்டுவிட்டு நள்ளிரவு சென்னை திரும்பினார். இன்று ஐகோர்ட் வழங்கும் தீர்ப்பு பொறுத்து தனது அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யவுள்ளார்.