தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பின்னணி பாடகி சின்மயி கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பான 'மீ டு' என்கிற சோசியல் மீடியா பிரச்சாரத்தின் மூலமாக பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதன் மூலம் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இதனாலேயே நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் சின்மயி மீது கருத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது திடீரென சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.. இருந்தாலும் அவர் தான் ஏற்கனவே வைத்திருக்கும் பேக்கப் கணக்கு மூலமாக இந்த தகவலை தெரிவித்துள்ளதுடன் தனது கணக்கு நீக்கப்பட்டு அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
சின்மயியின் கணக்கிற்கு ஆண்கள் சிலர் தங்களது ஆணுறுப்புடன் கூடிய புகைப்படங்களை நேரடி செய்தியாக (DM) தொடர்ந்து அனுப்பி வந்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் சப்போர்ட் குழுவில் சின்மயி புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது கணக்கை இன்ஸ்டா குழு நீக்கிவிட்டதாக சின்மயி கூறியுள்ளார்.