ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஸ்வரூபம் படம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் மீண்டும் பேச தயாராக இருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக, கமல்ஹாசன் நடித்து, இயக்கி, பெரும்பொருட் செலவில் தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை எதிர்த்து கமல்ஹாசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த வழக்கு விசாரணை 28ம் தேதி நடக்கிறது. இதற்கிடையில், விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட் நடிகர்–நடிகைகளுக்கு திரையிட்டு காண்பிப்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருக்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், என் நாட்டில் நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாளன் என்று பேசப்பட்டு இருக்கிறேன். அவர்களை என் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறு கூட்டம் எதை சொன்னாலும் அதை மாற்று கருத்தாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது. நான், தனி மனிதன். அரசாங்கம் அல்ல. விஸ்வரூபம் படம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் அமைப்புகளுடன் பேசியிருக்கிறேன். மீண்டும் அவர்களுடன் பேச தயாராக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.