வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது படத்திற்கு ஜெயிலர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அந்த டைட்டிலை சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்தனர். பல சினிமா பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியும், ஜெயிலர் படத்தின் போஸ்டர் வெளியானதை அடுத்து ரஜினிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதில், ‛‛எத்தனை குதிரைகள் ஓடினாலும் ரஜினிகாந்த் என்ற இந்த குதிரை விழும் சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற மூன்றெழுத்து மேஜிக், ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும் வாழ்த்துக்கள்'' என தெரிவித்தார். ஆனால் சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவு ரஜினியை கிண்டல் செய்வதாக செய்தி வைரலானது.
அதையடுத்து அதற்கு கண்டனம் தெரிவித்து மீண்டும் ஒரு பதிவு போட்டுட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி. அந்த பதிவில், பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாமல் சாமி ஆடுவாங்க என்று தெரிவித்துள்ளார்.